Home இலங்கை அன்ரன் பாலசிங்கத்தின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழில் இடம்பெற்றுள்ளது

அன்ரன் பாலசிங்கத்தின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழில் இடம்பெற்றுள்ளது

by admin

தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கந்தர்மடத்திலுள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்று  14.12.2016 நடைபெற்றது.

இந்நிகழ்வில் கட்சியின் அங்கத்தவர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வில் ஈகச் சுடரினை காரைநகர் சரஸ்வதி வித்தியாலய அதிபர் சிவகுரு இளங்கோ அவர்கள் ஏற்றினார். அதனைத் தொடர்ந்து மலர்வணக்கமும், தேசத்தின் அங்கீகாரத்திற்கான போராட்டத்தில் உயிர் நீத்த மாவீரர்கள் பொது மக்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து யாழ் ஊடக அமையத்தல் தலைவர் இரட்ணம் தயாபரன்,  காரைநகர் சரஸ்வதி வித்தியாலய அதிபர் சிவகுரு இளங்கோ, மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் உரையாற்றினர்

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More