Home இலங்கை ஊடக சுதந்திரத்தை உறுதி செய்ய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது – கரு பரணவிதாரன

ஊடக சுதந்திரத்தை உறுதி செய்ய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது – கரு பரணவிதாரன

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை முழு அளவில் உறுதி செய்யவும் பாதுகாக்கவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக பிரதி ஊடக அமைச்சர் கரு பரணவிதாரன தெரிவித்துள்ளார். வானொலிச் சேவையொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புக்கள் குறித்த விடயங்களை ஊடகங்கள் தெளிவுபடுத்த வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ள அவர் அரசியல்வாதிகளை விமர்சனம் செய்ய ஊடகங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகவும், ஊடகங்களை விமர்சனம் செய்யும் உரிமை அரசியல்வாதிகளுக்கும் இருக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ள அவர் எனினும் ஊடகங்களை ஒடுக்குவதற்கு அரசியல்வாதிகளுக்கு அதிகாரமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக சில தரப்பினர் பிழையான வெளிப்படுத்தல்களை மேற்கொள்ள முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளதுடன் அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் தலையீடு செய்ய எவருக்கும் இடமளிக்கப்படாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More