Home பல்சுவை மகளின் திருமணப் பரிசாக வீடில்லாத 90 பேருக்கு வீடு வழங்கும் தொழிலதிபர்

மகளின் திருமணப் பரிசாக வீடில்லாத 90 பேருக்கு வீடு வழங்கும் தொழிலதிபர்

by admin


இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவர் தன்னுடைய மகளின்  திருமணப் பரிசாக வீடற்ற 90 பேருக்கு வீடுகள் அமைத்துக் கொடுத்துள்ளார்.   2 ஏக்கர் பரப்பளவில் நகரம் ஒன்றை  உருவாக்கி அதில் வீடுகளை அமைத்துக்  கொடுத்துள்ளார்.

ஆடைத் தொழிற்சாலை நடத்திவரும் தொழிலதிபரான  அஜய் முனாத் என்பவர்  தனது  மகள் ஸ்ரேயாவின் திருமணத்தை வித்தியாசமான முறையில் நடத்த திட்டமிட்டார்.
அதன்படி சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் 1.5 கோடி ரூபா செலவில் 90 வீடுகளை கட்டி  வீடில்லாதவர்களுக்கு  பரிசாக வழங்கி உள்ளார்.

வீடுகளை யாருக்கு வழங்குவது  என்பது தொடர்பில்  தனிநபர் ஏழையாக இருக்கவேண்டும், குடிசையில் வசிப்பவராக இருக்கவேண்டும், போதைக்கு அடிமையாகாதவராக இருக்க வேண்டும்  போன்ற   நிபந்தனைகளைக்  கொண்டு பயனாளர்களை தேர்வு செய்துள்ளார். அவர்   அமைத்து வழங்கியுள்ள  வீடுகளில் இதுவரை  40 குடும்பங்கள் குடியேறியுள்ளனர்.

இந்நடவடிக்கையை தான் பெரிதும் பாராட்டுவதாக தெரிவித்துள்ள   முனாத் மகள் ஸ்ரேயா இதை தனது  திருமண பரிசாக நினைக்கின்றேன் என மகிழ்வுடன் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More