Home இலங்கை ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்த ஆயுதங்கள் இரசாயன பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட உள்ளது

ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்த ஆயுதங்கள் இரசாயன பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட உள்ளது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


வெலிவேரிய – ரத்துபஸ்வல துப்பாக்கி பிரயோகத்திற்காக இராணுவத்தினர் பயன்படுத்திய ரி 56 ரகத்தை சேர்ந்த 40 துப்பாக்கிகள் குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்தினால் கம்பஹா நீதவான் நீதிமன்றத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான வழக்கு  நேற்று கம்பஹா முதன்மை நீதவான் காவின்த நாணயக்கார முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோதே குறித்த துப்பாக்கிகள் கையளிக்கப்பட்டுள்ளன.

கையளிக்கப்பட்ட துப்பாக்கிகளை அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுத்தமான குடிநீரை கோரி ரத்துபஸ்வல கிராம மக்கள் கடந்த 2013 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேளை இந்த ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர். சம்பவத்தின் போது மூன்று பேர் பலியாகியமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More