Home இந்தியா பிரதமர் மோடிக்கு எதிராக தன்னிடம் பலமான, ஆதாரம் இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்:-

பிரதமர் மோடிக்கு எதிராக தன்னிடம் பலமான, ஆதாரம் இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்:-

by admin

புpரதமர் மோடிக்கு எதிராக தன்னிடம் பலமான, பாதுகாப்பான ஆதாரம் இருப்பதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 500, 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததிலிருந்து பிரதமரை ராகுல்காந்தி கடுமையாக விமர்சனம் செய்து வவருவதுடன் அவரது தலைமையில் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் பிரதமர் மோடியின் தனிப்பட்ட ஊழல் தொடர்பான முழு விவரங்கள் தன்னிடம் இருக்கிறது எனவும இந்த ஊழல் விவரங்களை பாராளுமன்றத்தில்; தெரிவித்தால் தன்னை பற்றி மோடி உருவாக்கி வைத்துள்ள மிகப்பெரிய பிம்பம் உடைந்து விடும் எனவும் ராகுல்காந்தி நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் ஊழல் குறித்த ஆவணங்கள் இருந்தால் அதனை ராகுல்காந்தி உடனடியாக வெளியிட வேண்டும் என டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் வலியுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு எதிரான ஊழல் புகார் ஆதாரம் குண்டு துளைக்காதது, அது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் தன்னை பேச விடாமல் பிரதமர் தடுப்பதாகவும்; குற்றம் சாட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More