Home இந்தியா ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பே பதன்கோட் விமானப்படை தள தாக்குதலை நடத்தியது:-

ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பே பதன்கோட் விமானப்படை தள தாக்குதலை நடத்தியது:-

by admin


இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டது ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பு என இந்திய தேசிய பாதுகாப்பு முகவர் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் பதன்கோட் விமானப்படை தளத்தில் நடந்த தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில் தாக்குதலினை மேற்கொண்ட 5 தீவிரவாதிகள் கொல்லப்படடிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இன்றைதினம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த இந்திய தேசிய பாதுகாப்பு முகவர் அதில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மவுலானா மசூத் ஆசார் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More