குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இனங்களுக்கு இடையில் பிணைப்பினை ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பரத்தமுல்ல அபேகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிங்கள, தமிழ், முஸ்லிம் கலாச்சாரங்களுக்கு மதிப்பளிக்க வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ள அவர் அமைச்சர் மனோ கணேசன் சிறந்த முறையில் சேiவாயற்றி வருவதாகவும் அவருக்கு நன்றி பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் சிங்கள மற்றும் தமிழ் மொழியில் கவிதை இயற்றுவோருக்கு விசேட பரிசில்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Add Comment