குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினர் திரு.ஆ.புவனேஸ்வரன் இன்று வட மாகாண பேரவைச் செயலக்கத்தில் பேரவையின் தலைவர் C.V.K.சிவஞானம் முன்னிலையில் வடக்கு மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.
இந் நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர்கள் விந்தன் கனகரத்தினம், சயந்தன்,மற்றும் கட்சியின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.அண்மையில் காலமான பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெயநாதனின் முல்லை மாவட்ட உறுப்பினர் வெற்றிடம் இதன்மூலம் நிரப்பப்பட்டது.


Add Comment