Home இலங்கை பெருமளவிலான அரசகாணிகள் அபகரிக்கப்பட்டு வருகின்றன – சி.வி.விக்னேஸ்வரன்

பெருமளவிலான அரசகாணிகள் அபகரிக்கப்பட்டு வருகின்றன – சி.வி.விக்னேஸ்வரன்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அரசியல் தலையீடுகளினால் வட மாகாண சபையின் கவனத்திற்கு கொண்டுவரப்படாமல் பெருமளவிலான அரசகாணிகள் அபகரிக்கப்பட்டு வருவதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

வடமாகாண சபையின் அடுத்து வருடத்திற்கான வரவு செலவுத்திட்டத்தின் முதலமைச்சரின் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும்  வடக்கில் பெருமளவிலான காணிகளை இராணுவத்தினர் தம்வசம் வைத்துள்ள நிலையில், தற்போது அரச காணிகளையும் சட்டரீதியாக தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அரச காணிகள் மட்டுமல்லாமல் , பெருமளவிலான தனியார் காணிகளும், படையினரின் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ளதோடு, அவற்றை விடுவித்துக் கொள்ள முடியாத நிலைமை காணப்படுகிறது. எனவே இது தொடர்பில் மத்திய அரசிற்கு அடிக்கடி அழுத்தம் கொடுக்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது என முதலமைச்சர் தெரிவித்தார்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More