இலங்கை பிரதான செய்திகள்

சமூக ஊடக வலைமையப்புக்கள் மீது அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது – கூட்டு எதிர்க்கட்சி

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


சமூக ஊடக வலையமைப்புக்கள் மீது அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது எனவும் இலங்கையில் சமூக ஊடக வலையமைப்புக்களை தடை செய்வதற்கு சில தரப்பினர் முயற்சித்து வருவதாகவும் கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அண்மையில் கடற்படைத் தளபதி ஊடகவியலாளர் ஒருவரைத் தாக்கியதாகக் குற்றம் சுமத்தியுள்ள அவர் சமூக ஊடக வலையமைப்புக்கள் மற்றும் ஏனைய ஊடகங்களின் ஒத்துழைப்புடன் அரசாங்கம் ஆட்சிப் பீடம் ஏறியதாகவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.