Home இலங்கை வெளிநாடுகளில் கடமையாற்றி வரும் தூதுவர்கள் ராஜதந்திரிகள் குறித்து அரசாங்கம் கவனம்

வெளிநாடுகளில் கடமையாற்றி வரும் தூதுவர்கள் ராஜதந்திரிகள் குறித்து அரசாங்கம் கவனம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வெளிநாடுகளில் கடமையாற்றி வரும் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் இவ்வாறு விசேட கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பாக ரஸ்ய தூதுவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இவ்வாறு விசேட கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் மலேசியாவிற்கான இலங்கைத் தூதுவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதனைத் தொடர்ந்து அவருக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மஹேசினி கொலன்னே தெரிவித்துள்ளார்.

மேலும் உலகின் ஏனைய நாடுகளில் கடமையாற்றி வரும் இலங்கைத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதாகவும் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உயரிய நியதிகளுக்கு உட்பட்ட வகையில் வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More