Home இலங்கை ஜனவரி மாதம் 8ம் திகதிக்கு முன்னதாக உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும்

ஜனவரி மாதம் 8ம் திகதிக்கு முன்னதாக உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


ஜனவரி மாதம் 8ம் திகதிக்கு முன்னதாக உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.ஜே.என்.எம். புஸ்பகுமார இதனைத் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப பாடப் பிரிவுகளுக்கான பரீட்சை பெறுபேறுகளைத் தவிர்ந்த ஏனைய அனைத்துப்  பெறுபேறுகளை தயாரிக்கும் பணிகள் பூர்த்தியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தாரதர உயர்தரப் பரீட்சையில் 3,15,652 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

இதில் 30,000 பரீட்சார்த்திகள் புதிய தொழில்நுட்ப பிரிவுகளின் அடிப்படையில் பரீட்சையில் தோற்றியியிருந்தனர். தொழில்நுட்ப பிரிவில் செயன்முறைப் பரீட்சைகள் நடத்தப்படுவதற்கு கால தாமதம் ஏற்பட்டதனால் பரீட்சை பெறுபேறுகளை உரிய நேரத்தில் வெளியிட முடியவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More