Home இலங்கை முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் அரச அனுசரனையுடன் – ஜனாதிபதி ஆலோசனை

முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் அரச அனுசரனையுடன் – ஜனாதிபதி ஆலோசனை

by admin


முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் அரச அனுசரனையுடன் – ஜனாதிபதி ஆலோசனை

முன்னாள் பிரதமர் மறைந்த ரத்னசிறி விக்ரமநாயக்க அவர்களின் இறுதி நிகழ்வுகளை அரச அனுசரனையுடன் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அன்னாரது மறைவுச்செய்தியை கேட்டவுடன் அது தொடர்பாக ஆராய்ந்த ஜனாதிபதி; சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைந்து முன்னாள் பிரதமரின் இறுதி நிகழ்வுகளை அரச அனுசரனையுடன் நிகழ்த்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் விரைவாக மேற்கொள்வதற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

ரத்னசிறி விக்ரமநாயக்க ஜனாதிபதியின்; சிரேஷ்ட ஆலோசகராக கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது

முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்க காலமானார் :

இலங்கையின் முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை தனது 83ஆவது வயதில்   சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையொன்றில் கடந்த ஒரு வார காலமாக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலமானதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியிலும் கடந்த 2005ஆம் ஆண்டு தொடக்கம் 2010ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியிலுமாக ரட்னசிறி விக்ரமநாயக்க இரு தடவைகள் பிரதமராக பதவிவகித்திருந்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More