Home இந்தியா தந்தைமாரை இழந்த 700 மகள்மாருக்கு சீர்வரிசையுடன் மணம் முடித்து வைத்த அப்பா

தந்தைமாரை இழந்த 700 மகள்மாருக்கு சீர்வரிசையுடன் மணம் முடித்து வைத்த அப்பா

by admin

தந்தையை இழந்த 700-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரியான மகேஷ் சவானி என்பவர்  திருமணம் செய்து வைத்திருக்கிறார்.  கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் தந்தையை இழந்த 236 பெண்களுக்கு தனது சொந்த செலவில்  செய்து வைத்த திருமணத்தில்  சுமார் ஐம்பதாயிரம்  பேர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர்.

திருமணத்தின் போது சீர்வரிசையாக  5லட்சம் ரூபா பெறுமதியில் கட்டில் சோபா உட்பட வீட:டுக்கு தெவையான பொருட்களையும் வழங்கியுள்ளார். கடந்த 2008-ம் ஆண்டு தன்னிடம் வேலை செய்த ஒருவர் அவரின் மகள் திருமணத்துக்கு சிலநாட்களுக்கு முனனர்; இறந்து விட்டதிலிருந்து  இதுபோல தந்தையை இழந்த பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுவரை தந்தையை இழந்த சுமார் 700-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தனது செலவில் திருமணம்  செய்து வைத்திருப்பதாகவும் அவர்கள் அனைவரும் தன்னை அப்பா என்றே அழைக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More