Home இலங்கை வெள்ளை வான் சம்பவங்கள் குறித்த முக்கிய ஆவணங்கள் களவாடப்பட்டுள்ளன

வெள்ளை வான் சம்பவங்கள் குறித்த முக்கிய ஆவணங்கள் களவாடப்பட்டுள்ளன

by admin

குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு

வெள்ளைவான் சம்பவங்கள் குறித்த முக்கிய ஆவணங்கள் களவாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்;கப்படுகிறது. திருகோணமலை கடற்படை முகாமிலிருந்து இவ்வாறு முக்கியமான ஆவணங்கள் களவாடப்பட்டுள்ளன.
லெப்டினன் கொமடோர் கே.சீ. வெலகெதர தொடர்பிலான ஆவணங்களே இவ்வாறு களவாடப்பட்டுள்ளன. வெள்ளைவான் கடத்தல்கள் தொடர்பிலான முக்கிய சாட்சியாளராக கே.சீ வெலகெதர கருதப்படுகின்றார்.
மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியில் இருந்த போது இந்த வெள்ளைவான் கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த மார்ச் மாதம் 29ம் திகதி திருகோணமலை கடற்படை முகாமில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் இவ்வாறு களவாடப்பட்டுள்ளன.
வெள்ளைவான் கடத்தல், சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள், ஆயுத கடத்தல்களில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் மற்றும் கடற்படை அதிகாரிகள் தொடர்பிலான ஆவணங்களே களவாடப்பட்டுள்ளன

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More