குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு:-

கூட்டு எதிர்க்கட்சியினர் காலி முகத் திடலில் இறுதிக் கூட்டத்தை நடாத்த் திட்டமிட்டுள்ளனர்.
கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி இதனைத் தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியின் பாத யாத்திரையின் இறுதி நிகழ்வு இன்றைய தினம் நடைபெறவுள்ளது.
கிரிபத்கொடவிலிருந்து இந்தக்கூட்டம் இன்றைய தினம் கொழும்பை சென்றடைய உள்ளது.
அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தினாலும் எதாவது ஓர் வழியில் கூட்டம் நடத்தப்படும் என கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love
Add Comment