Home இலங்கை நல்லிணக்கப் பொறிமுறைச் செயலனியில் பதிவு செய்யுங்கள்!!!!

நல்லிணக்கப் பொறிமுறைச் செயலனியில் பதிவு செய்யுங்கள்!!!!

by admin

அரசாங்கத்தின் நல்லிணக்கப் பொறிமுறைக்கான வலையச்செயலணியில் பதிவு செய்யுங்கள்!!!!   என தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான சமூகம் கோரிக்கை விடுத்து  அறிக்கை  ஒன்றினை வெளியிட்டுள்ளது.  குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

நல்லிணக்கப் பொறிமுறை உருவாக்கம் தொடர்பிலான பாதிக்கப்பட்ட மக்களின் கருத்தறியும் வலைய மட்ட கருத்தறியும் செயலணியின் செயற்பாடுகள் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இக் குழுவின் செயற்ப்பாடானது போரின்பால் பாதிக்கப்பட்ட  சமூகங்கள் அதிலிருந்து எவ்வாறு மீள முடியும் என்று அவர்களிடமே கருத்துக்களைக் கேட்டறிந்து  அறிக்கையிடல் ஆகும்

எனவே நாடெங்கிலும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் இச்  செயலணி  அமர்வுகளில் பங்குபற்றி விவரங்களை பதிவுசெய்து தமது நேசத்துக்குரியவர்களின் விடுதலையின் அவசியத்தை தெரிவிக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள்

மக்கள் கருத்தறியும் குழுவினர் வடக்கு கிழக்கின் சகல மாவட்டங்களிலும்  நாடளாவிய ரீதியாக பதினைந்து கிளைக் காரியாலயங்களை நிறுவி தமது செயற்ப்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்  அந்தவகையில் மேல்மாகாணத்திற்கான பிரதான அலுவலகம் இலக்கம் 24/13 விஜயபா மாவத்தை நாவல வீதி நுகேகொட எனும் முகவரியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

வலையச்செயலணியின்  செயற்பாட்டு அமர்வுகள் ஏற்கனவே  தொடங்கப்பட்டுள்ளமையால் குறித்த அமர்வுகளில் பதிவுசெய்யத் தவறியவர்கள் அந்தந்த மாவட்டத்தில் குறித்த குழுவினால் நியமிக்கப்பட்டிருக்கும் இணைப்பாளர்களுடன்  பிரதேச செயலகங்கள் ஊடாக தொடர்புகொண்டு தமது கருத்துக்களை எழுத்துமூலம் பதிவுசெய்ய முடியும்.  எவ்வாறாயினும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான  கருத்தறியும்  குழுவின் செயற்பாடுகள் ஒகஸ்ட்  மாத  இறுதிக்குள்  முழுமைப்படுத்த இருப்பதனால்  தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் பெற்றோர்கள்  காலக்கிரமத்தில் கருத்துக்களை பதிவு செய்வது  அவசியமாகும்.  கருத்தியல் அடிப்படையிலான  சிக்கல்களைக்  களைவதன்  மூலமே  நல்லிணக்கத்தினை  ஏற்படுத்த முடியும்  அதற்கமைய  இனமுரண்பாட்டின்  இறுதி வடிவத்தின்  எச்சங்களாக  நீண்டகாலம்  சிறைச்சாலைகளில்  தடுத்து  வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளின் விடுதலை என்பது இனங்களுக்கிடையிலான  நல்லிணக்கத்திற்கு  அவசியமான  ஒன்றாகவே  நோக்கப்படுகிறது  ஆகையினால்  கைதிகளின் உறவினர்கள் தமது உறவுகளின் விடுதலையை என்னமுறையில்  எதன் ஊடாகப் பெறமுடியும் என்பதனையும் அதன் நியாயத் தன்மையையும் அச்சமின்றி பதிவுசெய்யமுடியும்

எனவே இச்  சந்தர்ப்பத்தினை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள பாதிக்கப்பட்ட தரப்பினர் முன்வரவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More