Home இலங்கை ஆறுமாதங்களிற்குள் மதுவரித் திணைக்களத்தினால் 231 வழக்குகள் பதிவு – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

ஆறுமாதங்களிற்குள் மதுவரித் திணைக்களத்தினால் 231 வழக்குகள் பதிவு – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

by admin

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த 2016.01.01 இருந்து  2016.06.30 வரையான ஆறுமாத காலப்பகுதியில் 231 வழக்குகள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு நீதிமன்றில்  பதிவுசெய்யப்பட்டுள்ளது அத்துடன் இவற்றில் 226 வழக்குகளின்  தண்டப்பணமாக 1416600 ரூபா அறவிடப்பட்டுள்ளது என மதுவரித் திணைக்கள புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன

குறித்த வழக்குகள் கசிப்பு உற்பத்தி நிலையங்களில் கைது செய்யப்பட்ட மூன்றுபேரும்  ,கசிப்பினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 53 பேரும் ,கோடாவினை வைத்திருந்த ஒருவரும்  ,கசிப்பு உற்பத்தி  செய்வதற்கான உபகரணங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரும், அனுமதிப்பத்திரம் இன்றி சாராயம்  விற்ற  குற்றச்சாட்டில் 5 பேரும், அனுமதிப்பத்திரம் இன்றி கள்   விற்ற  குற்றச்சாட்டில் 91 பேரும், அளவுக்கு மீறிய கள் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 35 பேரும், கஞ்சாவினை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரும், இருபத்தொரு வயதிற்கு குறைந்தவர்களிற்கு சிகரட்  விற்ற குற்றச் சாட்டில் 41 பேருமாக மொத்தமாக 231 பேர்  கைதுசெய்யப்பட்டு கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு நீதிமன்றில் ஆயர்ப்படுத்தப்பட்டது   இவற்றில் 226 வழக்குகளின்    தண்டப்பணமாக 1416600 ரூபா நீதிமன்றங்களால்  அறவிடப்பட்டுள்ளது என மதுவரித் திணைக்கள புள்ளி விபரங்கள் சுட்டிக் காட்டி நிற்கின்றன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More