Home இலங்கை நட்டமடையும் அரச நிறுவனங்களை விற்பனை செய்ய எதிர்க்வில்லை – ஜே.வி.பி:

நட்டமடையும் அரச நிறுவனங்களை விற்பனை செய்ய எதிர்க்வில்லை – ஜே.வி.பி:

by admin

நட்டமடையும் அரச நிறுவனங்கள் விற்பனை செய்யப்படுவதனை எதிர்க்கவில்லை என ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு பயன்படாத நட்டத்தில் இயங்கி வரும் அரச நிறுவனங்கள் விற்பனை செய்வதனை தமது கட்சி எதிர்க்கவில்லை என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை பொருளாதார மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடன் சுமையுடன் தனியார் நிறுவனங்களுடன் ஒப்படைக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

கடன் சுமையை ரத்து செய்யாது தனியார் துறையினரிடம் இவ்வாறு நிறுவனங்கள் ஒப்படைக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிய பொருளாதாரத்தை கொண்ட இலங்கை போன்ற நாடுகளில் அரசாங்கம் சில விடயங்களில் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More