குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்கள் எவ்வித அச்சமும் இன்றி கல்வி நடவடிக்கைகளை தொடர முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு குறித்து அச்சமோ சந்தேகமோ கொள்ளத் தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர், விரிவுரையாளர்கள், மாணவர்களின் பெற்றோர்களை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்த போது இதனைத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து அவர்கள் ஜனாதிபதிக்கு விளக்கம் அளித்துள்ளனர்.
மாணவர்களின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் முழுப் பொறுப்பு என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment