Home இலங்கை பாலியல் வல்லுறுவுக்கு குற்ற சாட்டுக்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியம் மாத்திரம் போதும்:

பாலியல் வல்லுறுவுக்கு குற்ற சாட்டுக்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியம் மாத்திரம் போதும்:

by admin

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி – ளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்:-

பாலியல் வல்லுறுவுக்கு குற்ற சாட்டுக்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியம் மாத்திரம் போதும்:

பாலியல் வல்லுறுவு வழக்கின் போது பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியம் மட்டும்  போதுமானது என இந்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒன்றினை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்.மேல் நீதிமன்றில் நேற்று புதன் கிழமை வாய் பேச முடியாத காது கேட்க முடியாத பெண்ணை கடத்தி பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்தியமை தொடர்பிலான வழக்கு விசாரணையின் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன் போதே அவ்வாறு சுட்டிக்காட்டினார். அது தொடர்பில் மேலும் தெரிவிகையில் ,

இத்தகைய குற்றங்கள் சாட்சியங்களோடு செய்யப்படுவதில்லை. எனவே பெண்ணின் சாட்சியத்தில் நீதிபதிக்கு திருப்தி இருக்குமாயின் பெண்ணின் சாட்சியம் போதுமானது.

பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்தப்பட்ட பெண் ,  குடும்பத்தினரர் , உறவினர்கள் , நண்பர்கள் , சமூகத்தினரிடம் இருந்து ஒதுக்கப்படும் நிலை காணப்படும்.

சொந்த கணவனிடம் இருந்த அன்பு இழக்க நேரிடலாம். திருமணம் ஆகாத பெண் எனில் அவருக்கு மணமகனை தேடுவது கடினம். இவற்றை எல்லாம் மீறி , நீதிமன்றுக்கு சென்று நீதி கிடைக்குமா என்ற எண்ணத்தோட வருவார்கள்.

பெண் தான் பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்தப்பட்டேன் என வெளியில் தெரியபப்டுத்தினால் , அது அவர்களுக்கு மட்டும் பாதிப்பு இல்லை. அந்த பெண்ணின் குடும்பம் , உறவினர்கள் , நண்பர்கள் என பலர் பாதிப்பை எதிர் நோக்குவார்கள்.

இப்படியான நிலைகளை எல்லாம் மீறி தனக்கு நீதி வேண்டும் என நீதிமன்றுக்கு வருபவரை பூதக் கண்ணாடி வைத்து பார்க்க கூடாது. அந்த பெண் நீதிமன்றில் தெரிவிக்கும் சாட்சியம் நீதிபதிக்கு திருப்தியாக இருக்குமாயின் , அந்த பெண்ணின் சாட்சியம் மாத்திரம் போதுமானது. என தெரிவித்தார்.

இந்தியாவில் பாலியல் வல்லுறுவு வழக்குக்கு ஒன்பது நாளில் தீர்ப்பு.

இந்தியாவில் பாலியல் வல்லுறுவு வழக்கு ஒன்றுக்கு விரைவு நீதிமன்றம் ஊடாக 9 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

ஜேர்மன் நாட்டை சேர்ந்த பெண்ணொருவர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த வேளை சுற்றுலா வழிகாட்டி ஒருவர் அவரை சுற்றுலா தளங்களுக்கு அழைத்து சென்றார்.

அந்நிலையில் ஒரு நாள் விடுதியில் அந்த பெண்ணை பாலியல் வல்லுறுவுக்கு சுற்றலா வழிகாட்டி உட்படுத்தினார்.  அது தொடர்பில் அந்த பெண் முறைப்பாடு செய்தார்.

அது இந்திய அளவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது இந்திய அரசாங்கம் நெருக்கடிக்கு உள்ளானது. அதனால் இந்த வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைத்து 9 நாட்களுக்குள் அந்த வழக்குக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.

அந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியம் மாத்திரமே எடுத்துக் கொள்ளப்பட்டது. என மேல் நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More