
13 மாடி கட்டட இருதய சத்திர சிகிச்சைப் பிரிவொன்றை யாழ்ப்பாணத்தில் நிர்மாணிப்பதற்கு சீனாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
குறித்த கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு நிதி சார்ந்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு பூர்த்தியாகியுள்ளதாகவும் இருந்த போதிலும் கட்டட நிர்மாணப் பணிகளுக்கான நடவடிக்கை ஒழுங்குமுறை பிரகாரம் ஆரம்பிக்கப்படவில்லை எனவும் இது குறித்து யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தபோது பரவலாக ஆராய்ந்துள்ளதாகவும் ராஜித குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறித்த இருதய சத்திர சிகிச்சையில் பணியாற்றுவதற்கு 4 பேருக்கு கொழும்பிலுள்ள தேசிய வைத்தியசாலையில் பயிற்சி அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Spread the love
Add Comment