குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

வெளிநாடுகளினால் அழைப்பு விடுக்கப்படும் காரணத்தினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்வதாக வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அழைப்பு விடுக்கப்படுவதன் மூலம் நாட்டுக்கான நன்மதிப்பு எவ்வாறு காணப்படுகின்றது என்பது அம்பலமாகியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ள அவர் இந்த வெளிநாட்டு விஜயங்கள் தொடர்பில் சில தரப்பினர் அடிப்படையற்ற வகையில் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகவும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
Add Comment