குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு தமது தந்தையான பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர மீது முன் விரோதம் இருக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
துமிந்த சில்வாவிற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ சகல வழிகளிலும் பாதுகாப்பு வழங்கியுள்ளதாகவும் இவ்வாறு பாதுகாப்பு வழங்கியமை சந்தேகத்தை ஏற்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆதாரங்கள் இன்றி எவர் மீதும் குற்றம் சுமத்தப்பட முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் எனினும், கொலையின் பின்னர் கொலையாளிக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment