Home இலங்கை இந்தியாவில் வாழ்ந்து வரும் 70 வீதமான இலங்கை அகதிகள் நாடு திரும்ப விரும்புகின்றனர்

இந்தியாவில் வாழ்ந்து வரும் 70 வீதமான இலங்கை அகதிகள் நாடு திரும்ப விரும்புகின்றனர்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

இந்தியாவில் வாழ்ந்து வரும் 70 வீதமான இலங்கை அகதிகள் நாடு திரும்ப விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மூன்ற தசாப்த காலமாக இலங்கை அகதிகள் இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறு வாழ்ந்து வரும் 100,000 பேரில் சுமார் 70000 பேர் நாடு திரும்ப விரும்புகின்றனர் என ஈழ அகதிகள் புனர்வாழ்வு அமைப்பின் ஸ்தாபகர் சந்திரஹாசன் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தின் அகதி முகாம்களில் வாழ்ந்துவரும் 65000 இலங்கை அகதிகளிடம் நடத்தப்பட்ட விரிவான ஆய்வின் பின்னர் இந்த தகவல் வெளியிடப்படுவதாகவும் ஏனைய 35000 பேர் தனியாக அல்லது உறவினர்களுடன் தமிழகத்தில் வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்து ஏழு ஆண்டுகள் கடந்துள்ளதாகவும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இயல்பு நிலையைக் கொண்டு வர ஜனாதிபதியும் பிரதமரும் மெய்யாக முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ள அவர் ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்டவர்கள் புலம்பெயர் மக்களை நாடு திரும்புமாறு கோரியுள்ள நிலையில் இந்தியாவில் வாழ்ந்து வரும் இலங்கை அகதிகள் நாடு திரும்ப விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை திரும்ப விரும்பும் வறிய அகதிகளுக்கு இரு நாடுகளினதும் அரசாங்கங்கள் நிதி மற்றும் பொருள் உதவிகளை வழங்கி அவர்களது வாழ்க்கையை மேம்படுத்த வேண்டுமென கோரியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More