Home இந்தியா முதலமைச்சர் ஜெயலலிதாவின் பொறுப்புகள் பன்னீர்செல்வத்திடம் ஒப்படைப்பு

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பொறுப்புகள் பன்னீர்செல்வத்திடம் ஒப்படைப்பு

by admin

உடல்நலமின்றி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வகித்துவரும் பொறுப்புகள் அனைத்தும் நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக  ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

jeya-panner
மேலும்  அமைச்சரவைக் கூட்டங்களை ஓ. பன்னீர்செல்வமே தலைமை தாங்கி நடத்துவார் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிவுரையின் பேரிலேயே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. முதலமைச்சராக ஜெயலலிதாவே தொடர்வார் என்றும், அவர் நலம் பெற்று பணிகளைக் கவனிக்க ஆரம்பிக்கும்வரை இந்த ஏற்பாடு நடைமுறையில் இருக்குமென்றும் ஆளுநர் மாளிகையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா, உள்துறை, காவல்துறை, பொது நிர்வாகம் உள்ளிட்ட துறைகளைத் தன்வசம் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More