பிராந்திய அமைப்புகளின் ஒத்துழைப்பில் நடைபெறும் BRICS – BIMSTEC மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (15) இந்தியா பயணமானார். இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த மாநாட்டில் கலந்துகொள்கிறார்.
ஒக்டோபர் மாதம் 15 – 16 திகதிகளில் இம்மாநாடு இந்தியாவின் கோவாவில் நடைபெறுகிறது. BRICS மாநாட்டில் பங்குபற்றும் ஜனாதிபதி மாநாட்டில் பங்குபற்றும் பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவுள்ளார். பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவும் ஜனாதிபதியுடன் இப்பயணத்தில் இணைந்துகொண்டுள்ளார்
Spread the love
Add Comment