குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
இலங்கையில் இன்று முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது. நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் ஏற்பட்டுள்ள இயந்திரக் கோளாறு காரணமாக இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.
கொழும்பு தவிர்ந்த நாட்டின் ஏனைய அனைத்து பகுதிகளிலும் மின் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காலை மற்றும் இரவு ஆகிய இரண்டு நேரங்களிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.
பெரும்பாலும் இரண்டு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள இயந்திரக கோளாறுகளை பழுதுபார்ப்பதற்கு சில வாரங்கள் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மின்வெட்டு இன்றைய தினம் முதல் அமுல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love
Add Comment