Home இலங்கை பிரபாகரனின் இறப்பு – மரண சான்றிதழ் வழங்கும் செயற்பாட்டை TNA நல்லிணக்க அரசுடன் இணைந்து முன்னெடுக்கலாம்:

பிரபாகரனின் இறப்பு – மரண சான்றிதழ் வழங்கும் செயற்பாட்டை TNA நல்லிணக்க அரசுடன் இணைந்து முன்னெடுக்கலாம்:

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இறப்பு – மரண சான்றிதழ் வழங்கும் செயற்பாட்டை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு  நல்லிணக்க அரசுடன் இணைந்து முன்னெடுக்கலாம் என  முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருவதால், பிரபாகரனுக்கு மரண சான்றிதழ் வழங்கும் செயற்பாட்டை எளிதாக முன்னெடுக்கலாம் எனவும்  குறிப்பாக கூட்டமைப்பில் நீதியரசர்களும் வழக்கறிஞர்களும் உள்ளதால், அவர்களின் துணையுடன் தற்போதைய அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சிக்காலத்தில் பிரபாகரனுக்கு மரண சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தால், அதற்கென ஒரு ஆணைக்குழுவை அமைத்து எதற்காக பிரபாகரனுக்கு மரண சான்றிதழ் வழங்கினீர்கள் என விசாரணை செய்திருப்பார்கள்  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More