சிரியா நகரான அலெப்போவில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் வெளியேறுவதற்கு வசதியாக, அதன் மீதான தாக்குதலை, ரஷியா மற்றும் சிரிய படைகள் ஒன்று சேர்ந்து குறுகிய காலத்திற்கு அதிகாரபூர்வமாக நிறுத்தியுள்ளன.
துப்பாக்கிச் சூடுகள் நடந்ததாக சில அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டாலும், செவ்வாய்க்கிழமையிலிருந்து அங்கு அமைதி நிலவுவதாகவும் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் பகுதிகளில் எந்த வித வான் தாக்குதலும் நடத்தப்படவில்லை எனவும் , அதேபோல் அரசுக் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியிலும் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் நடைபெறவில்லை எனவும் ஐ.நா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment