குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
அடுத்த ஆண்டு மார்ச் மாதமளவில் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை கிடைக்கப்பெறும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கம் பொருளாதாரக் கொள்கைகளை மாற்றங்கள் இன்றி முன்னெடுக்க உள்ளதாகவும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் வழங்குவது குறித்து சாதகமான நிலைமையே காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சில தொழில்நுட்ப பிரச்சினைகளுக்கு மட்டுமே தீர்வு காண வேண்டியிருப்பதாகவும் இலங்கைக்கு சலுகைத்திட்டம் நிறுத்தப்பட்டு பங்களாதேஸிற்கு வழங்கப்பட்டதன் ஊடாக பங்களாதேஸ் பாரியளவில் ஏற்றுமதி வருமானத்தை விருத்தி செய்து கொண்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love
Add Comment