Home இந்தியா மாணவர் மாயம்: உள்துறை அமைச்சகம் முன்பு ஜே.என்.யு மாணவர்கள் போராட்டம்:-

மாணவர் மாயம்: உள்துறை அமைச்சகம் முன்பு ஜே.என்.யு மாணவர்கள் போராட்டம்:-

by editortamil

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பயோடெக்னாலஜி பிரிவு மாணவர்  நஜீப் அகமது கடந்த சனிக்கிழமை மாயமானார். அவரை முன்தினம் இரவு விடுதி காப்பாளர் முன்னிலையில் சில மாணவர்களும், பாதுகாப்பு ஊழியர்களும் தாக்கியதாக கூறப்படுகிறது. அந்த மாணவரை  கண்டுபிடிக்கக்கோரி  கடந்த 6 நாட்களாக பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த  சம்பவம்  தொடர்பாக வசந்த் கஞ்ச் போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த மாணவரை கண்டுபிடிக்க சிறப்பு விசாரணைக்குழுவை அமைக்கும்படி டெல்லி பொலீசாருக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் மாயமான மாணவனை கண்டுபிடிக்க வலியுறுத்தி 100–க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று உள்துறை அமைச்சகம் முன்பு போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களை பொலீசார் கைது செய்தனர்.

முன்னதாக ஜே.என்.யு. பல்கலைக் கழக துணை வேந்தர் மற்றும் பல்கலைக் கழக அதிகாரிகளை அறையில் வைத்து நிர்வாக கட்டிடத்தை பூட்டி மாணவர்கள் நேற்று முன் தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 20 மணி நேரத்திற்கு மேலாக அவர்கள் சிறை வைக்கப்பட்டனர்.

இது குறித்து மாணவர் அமைப்பு தலைவர் மோகித் பாண்டே கூறுகையில், “ஏழு நாட்கள் ஆகி விட்டது. நஜீப் குறித்து எந்த தகவலும் இல்லை. நஜீப், விடுதியின் மூத்த காப்பாளர், பாதுகாப்பு காவலர்கள் மற்றும் மாணவர்கள் முன்பு தாக்கப்பட்டார்.

தாக்கிய மாணவர்கள் குறித்து பார்த்த மாணவர்கள் புகார் தெரிவித்து உள்ளனர். இருப்பினும் அவர்கள் சுதந்திரமாக பல்கலைக் கழக வளாகத்தில் உலாவுகின்றனர்” என்றார்.

இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 80-100 மாணவர்கள் தைது செய்யப்பட்டுள்ளதாக பொலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More