குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
குறுகிய காலத்திற்கு மட்டுமே வற் வரி அறவீடு செய்யப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். வற் வரி குறித்து பாராளுமன்றில் விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். புதிய வற் வரி சட்ட மூலத்தில் சுகாதாரம் மற்றும் வீடமைப்பு ஆகியனவற்றுக்கான வரிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக புகையிலை மற்றும் தபால் துறைகளில் வரி அறவீடு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
வற் வரி மூலம் ஆயிரம் கோடி ரூபா அரசாங்கம் வருமானத்தை எதிர்பார்த்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
Add Comment