Home இலங்கை வட மாகாண முதலமைச்சர் அறிவிக்காமல் வெளிநாட்டு விஜயம் செய்துள்ளதாகக் குற்றச்சாட்டு

வட மாகாண முதலமைச்சர் அறிவிக்காமல் வெளிநாட்டு விஜயம் செய்துள்ளதாகக் குற்றச்சாட்டு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் அறிவிக்காமல் வெளிநாட்டு விஜயம் செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமது வெளிநாட்டு பயணம் தொடர்பில் வடமாகாண மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேவிற்கு அறிவிக்கவோ அல்லது அனுமதி கோரவோ இல்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன் பதில் முதலமைச்சர் ஒருவர் நியமிக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாண முதலமைச்சர் கடந்த 14ம் திகதி வெளிநாட்டு பயணம் செய்துள்ளதாகவும் 29ம் திகதி வரையில் அவர் தங்கியிருப்பார் எனவும் தெரிவிக்;கப்படுகிறது. இதனால் கடந்த 15ம் திகதி அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் கல்வி அமைச்சர் ரீ.குருகுலராஜாவை பதில் முதலமைச்சராக நியமித்திருந்தார்.  எனினும், குருகுலராஜா பதில் முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More