Home உலகம் ஈராக்கின் மொசூல் நகரில் இருந்து, மக்கள் கடத்தப்பட்டதற்கான உறுதியான தகவல்கள் இருப்பதாக ஐநா தெரிவிப்பு:-

ஈராக்கின் மொசூல் நகரில் இருந்து, மக்கள் கடத்தப்பட்டதற்கான உறுதியான தகவல்கள் இருப்பதாக ஐநா தெரிவிப்பு:-

by editortamil

ஈராக்கில் மொசூல் நகரை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கில் அந்நாட்டு மக்கள் கடத்தப்பட்டதற்கான உறுதியான தகவல்கள் தம்வசம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

மொசூல் நகரை நோக்கி அரசு படைகள் மற்றும் அதன் கூட்டணி படைகளும் முன்னேறி வரும் நிலையில், கடத்தப்பட்ட பொதுமக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்த அது திட்டமிட்டுள்ளதாகவும் ஐநா தெரிவித்துள்ளது.

ஐ.எஸ் குழுவில் சேர மறுத்த ஈராக் பாதுகாப்பு படையை சேர்ந்த 190 முன்னாள் படையினரும், 42 பொதுமக்களும் அவர்களால் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது.

இருவாரங்களுக்குமுன், பாக்தாத்தில் உள்ள அரசாங்கமானது, வட புல மொசுல் நகரில் உள்ள ஐ.எஸ் அமைப்பினரை விரட்டியடிக்க மிகப்பெரிய தாக்குதல் ஒன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More