Home இலங்கை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை இடைநிறுத்திக் கொண்டனர்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை இடைநிறுத்திக் கொண்டனர்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை இடைநிறுத்திக் கொண்டுள்ளனர். சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுடன் மாணவர் பிரதிநிதிகள் சந்திப்பு நடத்தியிருந்தனர். இந்த சந்திப்பினைத் தொடர்ந்து மாணவர்கள் முன்னெடுத்து வந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

அண்மையில் இரண்டு மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி வேண்டி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அமைச்சரின் வாக்குறுதிகளைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிடுவதற்கு மாணவர்கள் இணங்கியுள்ளனர். கடந்த வாரம் மாணவர்கள் சில போராட்டங்களை நடத்தியிருந்ததுடன் இன்று காலையும் மாணவர்கள் போராட்டத்தை நடத்தியிருந்தனர்.

யாழ்ப்பல்கலைக்கழக மாணவர்கள் நாளை மதியம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More