Home இலங்கை மத்திய வங்கி பிணை முறி சம்பவம் ஓர் பரிய விடயமல்ல – சரத் பொன்சேகா

மத்திய வங்கி பிணை முறி சம்பவம் ஓர் பரிய விடயமல்ல – சரத் பொன்சேகா

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
மத்திய வங்கி பிணை முறி சம்பவம் ஒர் பாரிய விடயமல்ல என முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுடன் ஒப்பீடு செய்யும் போது, மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் ஒர் சிறிய சம்பவமேயாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

களனி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் அரசியல் லாபமீட்டும் நோக்கில் மத்திய வங்கி பிரச்சினையை பயன்படுத்திக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். ஊனமுற்ற படைவீரர்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்திற்கு ஜனாதிபதி ஏற்கனவே தீர்வு வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More