Home இந்தியா ஜெயலலிதா பூரண குணமடைந்துள்ளதாக அப்பலோ மருத்துவமனையின் தலைவர் தெரிவிப்பு

ஜெயலலிதா பூரண குணமடைந்துள்ளதாக அப்பலோ மருத்துவமனையின் தலைவர் தெரிவிப்பு

by admin

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைந்துள்ளதாக அப்பலோ மருத்துவமனையின்  தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார். இன்று சென்னையில்  நடைபெற்ற   அப்போலோ மருத்துவமனை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள மருத்துவ கையேடு வெளியீட்டு நிகழ்ச்சியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  ஜெயலலிதா பூரண குணமடைந்துவிட்டார் எனவும்  தன்னைச் சுற்றி நடப்பதை அவர் நன்கு உணர்ந்து கொள்கிறார் எனவும்  தனக்கு  தேவைப்படுபவற்றை  தானே கேட்டுப் பெறுகிறார் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜெயலலிதா குணமடைந்தமை  மகிழ்ச்சி அளிப்பதாகவும் மருத்துவமனையிலிருந்து  எப்போது  வெளியேற வேண்டும் என்பதனை  முடிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ள அவர் ஜெயலலிதா பூரண குணமடைவதற்கு உதவிய  அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள்  லண்டன் மருத்துவர், எய்ம்ஸ் நிபுணர்கள், சிங்கப்பூர் மருத்துவர்கள் ஆகியோரின் பங்களிப்புக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More