Home இலங்கை கிளிநொச்சி சுண்டிக்குளத்தில் 112 கிலோ கேரள கஞ்சா மீட்பு

கிளிநொச்சி சுண்டிக்குளத்தில் 112 கிலோ கேரள கஞ்சா மீட்பு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி

யாழ்ப்பாணம் வடமராட்சி மருதங்கேணி பிரதேச செயலா் பிாிவிற்குட்பட்ட சுண்டிக்குளம் கடற்கரை பிரதேசத்தில் இன்று 07-11-2016 திங்கள் அதிகாலைப 118 கிலோ கேரள கஞ்சா  தர்மபுரம்   காவல்துறையினா்  மற்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. திங்கள் அதிகாலை சுண்டிக்குளம் கடற்கரையில் படகொன்றில் இருந்து சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் இறக்கப்படுவதனை அவதானித்த கடற்றொழிலாளா்கள் குறித்த இடத்திற்கு விரைந்து சென்ற போது பொதிகளை இறக்கிய படகு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டது.
இதேவேளை பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக கடற்கரையில் காத்திருந்த நபா்களும் தலைமறைவாகிய நிலையில்  கடற்றொழிலாளா்களினால் ஆரம்பத்திலேயே தா்மபுரம்  காவல்துறையினருக்கு தகவல் வழங்க்கப்பட்டிருந்தது
உடனடியாக அதிகாலை ஜந்து  முப்பது மணிக்கு தா்மபுரம் காவல்நிலையபொறுப்பதிகாரி டிஎம் சத்துரங்க தலைமையிலான ஒரு காவல்துறையினா்  குழு சுண்டிக்குளம் கடற்கரைக்கு விரைந்து சென்ற போது அங்கு கஞ்சா பொதிகள் மாத்திரமே கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் காணப்பட்டுள்ளது. சந்தேக நபா்கள் எவரும் அங்கில்லை.
குறித்த கஞ்சா பொதிகளை கைப்பற்றிய பொலீஸாா் அது சுமாா் 70 கிலோ கிராம் இருக்கும் என  ஆரம்பத்தில்  தெரிவித்தனா். பின்னா் அவை தர்மபுரம்  காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அளவை செய்யப்பட்டபோது கடற்கரையில்  கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா 94 கிலோ கிராமாக  காணப்பட்டது.

0

dsc00803

காவல்துறையினா்  கஞ்சா பொதிகளை மீட்டு திரும்பிய பின்னா் எற்கனவே அவற்றிலிருந்து கொண்டு செல்வதற்கு எடுத்திருந்த 24 கிலோ கஞ்சா பொதிகளுடன் தலைமறைவாக இருந்து இரண்டு சந்தேக நபா்களும் உந்துருளியில் செல்வதனை கடற்படையினா் அவதானித்துள்ளனா்.  எனவே அவா்களை சுற்றி வளைத்த பிடிக்க முற்பட்டபோது அவா்களும் தாங்கள் கொண்டு சென்ற கஞ்சா பொதிகளை எறிந்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனா்.
இதனை கைப்பற்றிய கடற்படையினா் அதனை  கிளிநொச்சி விசேட அதிரப்படையினரிடம் கையளித்துள்ளனா். அதிரடிப்படையினா் அதனை தா்மபுரம்  காவல்துறையினாிடம் கையளித்துள்ளனா்
எனவே தற்போது ஒட்டுமொத்தமாக 118 கிலோ கேரள கஞ்சா கைற்றப்பட்டுள்ளது.அதன் பெறுமதி இன்னும் மதிப்பீடு செய்யப்படவில்லை ஆனால் பல மில்லியன்கள் என காவல்துறையினா்  குறிப்பிடுகின்றனா்.
இயந்திர படகுகள் மூலம் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு எடுத்துச் செல்லப்படவிருந்த நிலையில் கடற்றொழிலாளா்கள்  அவதானித்து காவல்துறையினருக்கு தகவல் வழிங்கியதனையடுத்து கடத்தல்காரர்கள் கஞ்சாவை  அந்த இடத்திலேயே விட்டு தப்பிச் சென்றிருக்கலாம்  எனவும் சந்தேகிப்படுகிறது.
கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி  காவல்முஐறமா அதிபா் மகேஷ் வெலிகண்ணவின்  வழிநடத்தலில்  தா்மபுரம் காவல்துறையினா்  இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனா்.  சந்தேகநபா்களை கைது செய்யவதற்கான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்

dsc00804 dsc00808 dsc00809 dsc00832 dsc00836

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More