Home இந்தியா 500 , 1000ரூபாய் தாள்கள்; செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு தடை விதிக்க முடியாது – உச்சநீதிமன்றம்

500 , 1000ரூபாய் தாள்கள்; செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு தடை விதிக்க முடியாது – உச்சநீதிமன்றம்

by admin

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம்  தெரிவித்துள்ளது.  இந்தியா  முழுவதிலும் உள்ள 500, 1000 ரூபாய் தாள்களை  மீளப் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த 8ம் திகதி அறிவித்திருந்தார்.  மேலும் அதனைத்தொடர்ந்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் தாள்கள் வங்கிகள் மற்றும் ஏடிஎம்-கள் மூலம் மக்கள் புழக்கத்திற்கு வந்துள்ளன.

இந்நிலையில், பிரதமர் மோடியின் அறிவிப்பால், ஏழைய எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் எனவே இந்த அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.  இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பிற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் கொள்ளை முடிவில் தலையிட முடியாது என தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 25ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளனர். அதேவேளை  பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியத்தை போக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More