Home இலங்கை சூழ்ச்சிகளை வெற்றிகொள்வதற்கான மனோதிடம் என்னிடம் உள்ளது – ஜனாதிபதி

சூழ்ச்சிகளை வெற்றிகொள்வதற்கான மனோதிடம் என்னிடம் உள்ளது – ஜனாதிபதி

by admin


மோசடியாளர்களைச் சுற்றி மட்டுமன்றி நல்லதொரு நாட்டுக்கான எமது குறிக்கோள்களைச் சுற்றியும் தடைகள் சூழ்ந்திருந்த போதிலும், அவையனைத்தையும் வெற்றிகொள்வதற்கான மனோதிடம் தன்னிடமிருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ராவய பத்திரிகையின் முப்பது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (15)இடம்பெற்ற அறிஞர்கள் கருத்தாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ராவய உட்பட்ட ஊடகங்களின் விமர்சனங்களுக்கு தான் தொடர்ச்சியாக முகங்கொடுப்பதாகவு தெரிவித்த ஜனாதிபதி அனைவரினதும் மரியாதைக்கும் நம்பிக்கைக்குமுரிய அழகிய நாட்டைக் காண்பதே ராவய பத்திரிகையைப் போன்றே தனதும் குறிக்கோளாகுமெனவும் அந்த குறிக்கோளை அடைவதற்கான பயணத்தில் ஒத்தாசையுடனும் புரிந்துணர்வுடனும் பயணித்தால் அப்பயணம் மிக இலகுவானதாக அமையுமெனவும் மேலும் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தiலைமை பதவியை தான் பொறுப்பேற்றது விக்டர் ஐவன்  உள்ளிட்ட நீண்டகால நண்பர்கள் பலரின் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானதாகவும் 19ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுதல் உட்பட்ட நல்லாட்சி அரசின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு அதன்மூலம் கிடைத்த ஒத்துழைப்பை குறைத்து மதிப்பிட முடியாதெனவும் ஜனாதிபதி நினைவூட்டினார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More