Home இலங்கை இனவாத பிரச்சாரங்கள் குறித்து அமைச்சரவையில் பேசப்பட்டுள்ளது

இனவாத பிரச்சாரங்கள் குறித்து அமைச்சரவையில் பேசப்பட்டுள்ளது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
இனவாத பிரச்சாரங்கள் குறித்து அமைச்சரவையில் பேசப்பட்டுள்ளதாக ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற சில சம்பவங்கள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவங்கள் தொடர்பில் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் இன மற்றும் மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் ஏற்படக்கூடிய வகையில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் சில பௌத்த பிக்குகளினால், சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிரான குரோதப் பேச்சுக்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  சமூக ஊடக வலையமைப்புக்களில் சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிரான பிரச்சாரங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More