Home இலங்கை யாழில்.கொள்ளையில் ஈடுபட்டதாக பெண் உட்பட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

யாழில்.கொள்ளையில் ஈடுபட்டதாக பெண் உட்பட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்

யாழில் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றசாட்டில் ஒரு பெண் உட்பட இருவர் கோப்பாய் காவல்துறையினால் கைது செய்யப்பட்டு உள்ளனர். கோப்பாய் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் காவல் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையிலான விஷேட காவல்துறைக்குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கை மூலம் இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள்  39 வயது பெண்ணும் , குறித்த பெண்ணின் சகோதரியின் மகனாகிய 18 வயது இளைஞனும் ஆவார்கள். கைது செய்யப்பட்டவர்களிடம் இரண்டு மோட்டார் சைக்கிள் ,  நகை , மடிக்கணணி , பத்து கைத்தொலைபேசிகள் , தொலைபேசி மீள் நிரப்பு அட்டைகள் , முச்சக்கர வண்டிகளின் ஆவணங்கள் சில  என்பன மீட்கப்பட்டு உள்ளன.
img_4395
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட இரு மோட்டார் சைக்கிள்களும் , சுன்னாகம் மற்றும் மானிப்பாய் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் குற்ற செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டவை என காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

அத்துடன் கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், அதனை தொடர்ந்து நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More