Home உலகம் ஜிகா வைரஸ் மீதான அவசர நிலைப் பிரகடனத்தை முடிவுக்கு கொண்டுவருவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

ஜிகா வைரஸ் மீதான அவசர நிலைப் பிரகடனத்தை முடிவுக்கு கொண்டுவருவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கடந்த 8 மாதங்களாக ஜிகா வைரஸ் பாதிப்பிற்கான அவசர நிலைப் பிரகடனம்  நடைமுறையில் இருந்து வந்த நிலையில்   ஜிகா வைரஸ் மீதான அவசர நிலைப் பிரகடனத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம்  அறிவித்துள்ளது.   ஆயிரக்கணக்கான குழந்தைகள் மூளை குறைபாடுகளுடன் பிறந்தமைக்கு இந்த  ஜிகா வைரஸ்  காரணம்  அமைந்திருந்தது.  இது நுளம்பினால் பரவி வந்தது.

ஜிகா  வைரஸ்  அச்சுறுத்தல்  75 நாடுகளில்  காணப்பட்டதனையடுத்து  கடந்த பெப்ரவரி மாதம், உலக சுகாதார நிறுவனம் சர்வதேச அவசர நிலையை அறிவித்திருந்தது.   கடந்த 2007-ம் ஆண்டு முதல் காய்ச்சல், எபோலா மற்றும் போலியோ காரணமாக மூன்று முறை சர்வதேச அவசரகால நிலையை பிரகடனம் செய்த உலக சுகாதார நிறுவனம் 4-வது முறையாக ஜிகா வைரஸ்  காரணமாக பிரகடனம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Nமுலும் ஜிகா வைரஸ் மற்றும் அதனுடன் தொடர்புடைய  பின் விளைவுகள் மக்கள் உடல் நலத்திற்கு நீண்ட காலம் அச்சுறுத்தலாக இருக்குமெனவும் அதனால், ஜிகா வைரஸ்-க்கு எதிரான வலுவான நடவடிக்கை தொடரும் எனவும்  உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More