Home இந்தியா ஜெயலலிதா அவசர சிகிச்சைப்பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார் :

ஜெயலலிதா அவசர சிகிச்சைப்பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார் :

by admin

58 நாட்கள் தொடர் சிகிச்சைக்குப் பின்னர் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று மாலை, அவசர சிகிச்சைப்பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் அவர் வீடு திரும்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றப்பட்டதை அறிந்த அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர் எனவும் ஆடிப்பாடியும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர் எனவும் இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில்  முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்பி மக்கள் பணியாற்றுவார் என அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More