குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். மத்திய வங்கியின் ஆளுனராக கடமையாற்றிய காலத்தில் இடம்பெற்ற அரச சொத்து துஸ்பிரயோகங்கள் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது.
2014ம் ஆண்டுக்கான பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டியை ஏற்பாடு செய்யும் சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொள்ள இலங்கை முயற்சித்திருந்தது. இந்த முயற்சியின் போது முறைகேடுகள் இடம்பெற்றதாகவும் இந்த முறைகேடுகளுடன் அஜித் நிவாட் கப்ராலுக்கு தொடர்பு உண்டு எனவும் தெரிவிக்கப்படுகிறது
Spread the love
Add Comment