இலங்கை பிரதான செய்திகள்

ஊடகங்களை ஒழுங்குபடுத்த சுயாதீன சபையொன்று நிறுவப்படும் – கயந்த கருணாதிலக்க

media
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஊடகங்களை ஒழுங்குபடுத்த சுயாதீன சபையொன்று நிறுவப்படும் என ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.  அச்சு ஊடகங்கள், இலத்திரனியல் ஊடகங்கள், பதிவு செய்யப்பட்ட இணைய தளங்கள் போன்றவற்றை உரிய தர நிர்ணயங்களின் அடிப்படையில் ஒழுங்குபடுத்துவதற்கு இந்த குழு நிறுவப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் நேற்றைய தினம் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் பொதுமக்களின் கருத்து கேட்பது குறித்து அமைச்சரவையில் யோசனை சமர்ப்பிக்கப்பட்டதுடன் அந்த யோசனைக்கு அங்கீகாரம் கிடைக்கப்பெற்றதாகத் தெரிவித்துள்ள அவர் செய்திகளை மக்களுக்கு ஊடகங்கள் வழங்கும் போது தொழில்சார் தன்மை மற்றும் ஒழுக்க விதிகளுக்கு அமையவான வகையில் தர நிர்ணயங்களின் அடிப்படையில் செயற்படுகின்றனவா என்பது குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும் நிறுவனமாக இந்த சபை இயங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.