Home பிரதான செய்திகள் இருதயத்தை தானமாக வழங்கிய குத்துச்சண்டை வீரர்

இருதயத்தை தானமாக வழங்கிய குத்துச்சண்டை வீரர்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பிரித்தானியாவில் குத்துச் சண்டை வீரர் ஒருவர் தனது இருதயத்தை தானமாக வழங்கியுள்ளார். அறிமுக போட்டியில் பங்கேற்ற குத்துச் சண்டை வீரர் Jakub Moczyk  முதல் போட்டியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 22 வயதான Jakub Moczyk போட்டியின் மூன்றாம் சுற்றின் போது எதிர்த்தரப்பு வீரர் நடத்திய தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாட்களின் பின்னர் உயிரிழந்தார்.

கடந்த 19ம் திகதி இடம்பெற்றிருந்த   இந்தச் சம்பவத்தில் தலையில் ஏற்பட்ட கடுமையான காயங்களினால் உயிரிழந்துள்ள குறித்த குத்துச்சண்டை வீரர் ஏனையவர்களுக்கு உதவும் நோக்கில் தனது இருதயத்தை தானமாக வழங்கியுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More