குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு என தனியான சட்டங்கள் கிடையாது என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சட்டம் அனைவருக்கும் சமமானது எனவும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு என தனியான சட்டங்கள் கிடையாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன எழுப்பிய ஒழுங்கு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த போது அவர் தெரிவித்துள்ளார்.
ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தினேஸ் குணவர்தன குற்றம் சுமத்தியிருந்தார்.
Spread the love
Add Comment