Home இலங்கை இயலாமையுடன் கூடிய மக்களுக்கான சர்வதேச தின நிகழ்வுகள் கிளிநொச்சியில்

இயலாமையுடன் கூடிய மக்களுக்கான சர்வதேச தின நிகழ்வுகள் கிளிநொச்சியில்

by admin

குளோபல் தமிழ்ச்  செய்தியாளர்

இயலாமையுடன் கூடிய   மக்களுக்கான சர்வதேச தின நிகழ்வுகள் இன்று 03-12-2016  கிளிநொச்சியில் இடம்பெற்றது. காலை ஒன்பது முப்பது மணியளவில்  கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் ஆரம்பமாகிய இன்  நிகழ்வில்  வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை  மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் குருகுலராஜா , வடமாகாண  சுகாதார மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் சத்தியலிங்கம்  மற்றும் வடமாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் சார்பாக அவரது பிரதிநிதி ஆகியோர்  பிரதம  விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர் .

coop1

மங்கள விளக்கேற்றல் மற்றும் அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய இன்  நிகழ்வில்  மாற்று  வலுவுடையோர்களின்  நடன நிகழ்வுகள் ,கவிதைகள் என பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றது  அத்துடன்  வடமாகாணத்தில் உள்ள கல்வி ,சுகாதாரம் ,போக்குவரத்து , சம்பந்தப்பட்ட  பிரச்சனைகளை ஒரு குழுவினர்களால்  சுட்டிக்காட்டப்பட   வடமாகாண அமைச்சர்கள் பதிலளிக்கின்ற    சொல்லாடுகளம்   எனும்  நிகழ்வும்  நடைபெற்றமை இன்  நிகழ்வின்  சிறப்பே

coop3 coop5coop9coop11 coop15

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More